×

ஜடேஜா, சையத் பந்துவீச்சுக்குதான் பயந்தேன்: டுபிளசிஸ் ஒப்புதல்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் டுபிளசிஸ். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாகவும் இருந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் 69 டெஸ்ட், 143 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகள் என மொத்தம் 262 சர்வதேச போட்டிகளில் ஆடி 11,198 ரன்களை குவித்துள்ளார். டுபிளசிஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தவிர, ஐபிஎல், பிக்பேஷ் லீக், கரீபியன் பிரீமியர் லீக் என பல வெளிநாட்டு டி20 லீக் தொடர்களிலும் ஆடி ஏகப்பட்ட ரன்களை குவித்தவர். ஐபிஎல்லில் 2011லிருந்து 2015 வரை ஆடிய டுபிளசிஸ் அதன்பின்னர் மீண்டும் 2018லிருந்து 2021ம் ஆண்டுவரை ஆடினார்.

2022ம் ஆண்டிலிருந்து ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடும் டுபிளசிஸ் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்படுகிறார். தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டிலிருந்து நடக்கவுள்ள எஸ்.ஏ டி20 லீக்கில், சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியுள்ள ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டுபிளசிஸ் ஆடுகிறார். இன்று முதல் தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடங்கவுள்ள நிலையில், பேட்டியளித்த டுபிளசிஸ், ``தனது கெரியரில் தான் எதிர்கொண்ட கடினமான பவுலர்கள் பாகிஸ்தானின் சையத் அஜ்மல் மற்றும் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும்தான். இவர்களை எதிர்கொண்டபோது சவாலாகவும் கடினமாகவும் இருந்தது’’ என்று தெரிவித்தார்.

Tags : Jadeja ,Syed ,Du Plessis , I was afraid of Jadeja, Syed bowling: Du Plessis admits
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...